பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காறருடி ஒரு சிறிய ஒலை நறுக்கு. அதன் மையத்தில் வட்டமாகச் சிறிய தொளையிட்டு முள்ளைச் செருகிச் சோளத் தட்டுடன் இணைத்துக் காற்றிலே பிடித்து விட்டால் வத்துவிட்டது அதற்கு உயிர். ஒரே வேகம். கிறுகிறுவென்று சுற்றத் தொடங்கி விடுகிறது. இந்தக் காற்ருடியின்மேல் சிறு வயதிலே ஏற்பட்ட விருப்பம் இன்னும் எனக்கு மாருதிருக்கின்றது. அதன் சுழற்சி யிலே எத்தனை உணர்ச்சிகள் பிறக்கின்றன்! வாழ்க் கையின் உயர்வு தாழ்வுகளைப்பற்றி விரிவுரை செய் பவன் அதைக் காற்ருடிக்கு ஒப்பிடுகின்றன. காற்ருடி யின் முனைகள் மேலும் கீழுமாய் மாறி மாறிச் சுற்று வதுபோல வாழ்க்கை ஓங்கியும் தாழ்ந்தும் மாறிக் கொண்டிருக்கிறதாம். ஒரு நிலையில் நில்லாது அலேயும் மனத்திற்குக் காற்ருடியை உவமை கூறுவ துண்டு. - சித்திரைத் திங்களிலேயே காற்ருடிக்கு உயிர் வந்து விடும். பனையோலையைத் தேடிச் சிறுவர்கள் புற்ப் பட்டு விடுவார்கள். ஆளுல் ஆடித் திங்களில்தான் காற்ருடிக்கு நல்ல இளமைப் பருவம்! அப்பொழுது அதன் முறுக்கும், வேகமும் சொல்லி முடியா. காற்றுத்தேவன் காற்ருடியின் காதலன். அவன் மெய் தொட்டுவிட்டால் அதற்கு உண்டாகும் இன்பம் கசைக்டந்து விடுகிறது. அந்த முள் மட்டும் இல்லா விட்டால் ஒலை நறுக்கின் களியாட்டம் எப்படி முடியு. மென்றே சொல்ல முடியாது.