பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமையின் வேண்டுகோள்

செய்ததே அந்தோ! சீரெலாம் குலைந்தேன். வாட்டமே அறியா மனைவியும் வாடவும்; வறுமையும் பிணியும்மனைதனில் புகவும் சிறுமைநான்செய்தேன்;தேனினும் இனிப்பினாள் மறுகிட ஒருநாள் குடிவெறி மயக்கினால் தடிகொண் டடித்தேன்; சத்தியம் தவறினேன்; கடையிருந் தால் நான் கடைத்தேற லேது? பிடியதி லிருந்து பிழைத்திட வேறொரு வழியெனக் கில்லை; மக்களின் சார்பாய் அரசியல் நடாத்தும் அறிஞரும் இந்த அரக்கனை இன்னும் அழித்திடா தேனே இங்கும் அங்குமாய்த் தடைவிதிக் கின்றார்! அதனால்வரும்பணம்அடிமையென் போல்வார் குழந்தைகள்வயிற்றினில்கொட்டிய நெருப்பிலும் முதிர்நடை தளர்ந்த முதியோர் பதைப்பிலும், மதிநிகர் மனைவியின் வாடிடும் நெஞ்சினில் பாய்ச்சிய தீயிலும் பண்ணிய தல்லவோ ? பணமிதைக் கண்ணினால் பார்க்கவும் தகுமோ ? வழியினிற் கடைவலை வைத்தெமைப் பிடிக்கும் வழிப்பறிக் குதவியாய் வாழ்வதோ அரசு ? சிந்தையை மயக்கித் திருடிடும் பொருளால் நாட்டினை ஆண்டிடும் நாகரிகத் தோரே! நொந்திடும் ஏழையின் நிந்தையும் சாபமும் கள்ளுப் பணத்தினில் கண்டறி யீரோ ? ஆதலால் மதுவாம் அரக்கனை இன்றே மாய்த்திடுவீரே ! மதியிழந் துள்ளோர் விலங்கினை உதறி விழிபெற்று நலங்குலை யாமல் நாட்டினில் வாழவே. குறிப்பு : அரசாங்கத்தார் சில மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்கைஅமுலுக்குக்கொண்டு வந்து மற்ற இடங்களிலும்அதைக் கொண்டு வருவதா, கொண்டு வந்தால் வருவாய் குறையுமே என்று யோசனை செய்த காலத்தில் பாடியது.


             104