பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெலால் சென்

முந்திவந்த பகைவரை வேலால்-பெலால்
          மோதியுயி ருண்டுவரு வானால்.
          
 செத்தவர்கள் கணக்கில்லை யன்று-வளர்
       தீரனவன் களங்கொண்டான் வென்று,
 கத்துகுயில் மொழியாளைக் காண-அவன்
       கடுகிவந்தான் காற்றுவேகம் நாண.
     
 சூரியனும் மேற்றிசையில் வந்து -எங்கும்
       சூழுமிருள் கண்டனன் சிவந்து:
 ஆரியனும் மல்லகதி பறந்தான் களிப்பில்
       அங்கையிற் புருவின்பிடி மறந்தான்.
     
 விண்ணிலது படபடத்து நேரே-ஒரே
       வேகமதாய்ச் சென்றதவன் ஊரே.
 வண்ணப்பரி தட்டிவிட்டான் உள்ளம்-சால
       வதவதக்கத் தாண்டும்மேடும் பள்ளம்.
     
 கோட்டைதனில் நுழைகின்ற போதே -அங்குக்
        கொழுந்துவிட்ட தீகண்டான் தீதே;
  மீட்டுவந்த வெண்புறவு கண்டு-அந்தோ
        வீழ்ந்துவிட்டான் நாதனெனக் கொண்டு
      
 தீக்குளித்தாள் கற்பரசி நொந்தே-அந்தத்
       தீரனும் துடித்தான்உளம் வெந்தே.
 தேக்கெறியும் எரியிடையே சென்றான்-என்றன்
       தேனேவந்தேன் உன்னுடன்நான்” -என்றான்.

                    124