பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை இளநங்கை 1. ஆசை யிள நங்காய்-நீதான் அழகின் எல்லையானப் காசில் எழில்எனுமோர்-மணியால் கடைந்த நற்சிலையே! 2 நீலக் கடல்விழிகள்-அமுதம் நிறைத்த பொக்கிஷமோ? கோலக் கவிதையெல்லாம்-கன்னக் குழியில் காண்பதென்னே! 3 செவ்வி யிவையனைத்தும்-ஒருங்கே சிறுமை யெய்திடவே, கொவ்வை யிதழிடையே-முத்துக் கோவை காணுதடி 4 கண்ட நாள்முதலாய்-உள்ளத்தில் கனல் வளருதடி அண்ட ருலக இன்பம்-அதனை அணைக்க லாகாதடி. 5 அன்புச் சிரிப்பதல்ை-நீயே அகங் குளிரச் செய்வாய் துன்பம் துடைக்கவல்ல-மோகனச் சோலைப் பசுங்கிளியே! 142