பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/142

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜய பாரதம்

ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹ
உயருன்னத மலைராஜனருள் குமரீ
உமையாளவள் வடிவாகிய தேவீ-ஜயபாரதம்

அருளோங்கிடும் அன்பாம்நெறி கண்டாய்
அறமே உயர் வாழ்வின் குறி என்ருய்
உலகோர்தொழ உயர்நீதிகள் அருள்வாய்
உலகோர் இனிஒன்றாம்வகை புரிவாய்

ஜயபாரதம்

பகையால் அழி படையால் மிக நொந்தே
பயமோங்கிடு துயர் வாழ்வினில் வெந்தே
வகையேதுமே யறியர்ப் புவி மாந்தர்
மருளேகிட அருள் வாழ்வினை நல்காய்

ஜயபாரதம்

ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
ஜயபாரதம் ஜயபாரதம் ஜயஹே
உயருன்னத மலைராஜனருள் குமரீ
உமையாளவள் வடிவாகிய தேவி-ஜயபாரதம்

144