பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை கண்ணுக்குள் ளேவான மீனிருக்கக் கண்டேன் காலத்தை வென்றதோர் அன்பாழம் கண்டேனே கன்னத்தி லேசுழி வண்ணக்குழி கண்டேன் கவிதைப் பசுந்தேன் ஊற்றையும் கண்டேனே செம்பவழத் துண்டம் முத்தொளியில் கண்டேன் தேவாமுத மங்கு சிரிக்கவுங் கண்டேனே பங்கய மொட்டவிழ் முழுநிலவுங் கண்டேன் பார்க்கும் இருவிழி குறைகுறை கண்டேனே. 159