பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதில் ‘பாட்டெழுதி அனுப்பி வைத்தால் பாடிக் கொண்டேயிருப்பேன்; பாட்டிசையாய் உங்களை நான் பார்த்துப்பார்த் தேமகிழ்வேன் என்றெழுதிப் பொற்கடிதம் இங்கிதமாய் விடுத்துள்ளாய்இன்றெனக்குப் பாட்டெல்லாம் என்னவென்றே அறியாயோ ? பாட்டெல்லாம் உன்பாட்டு: பகலிரவும் உன்பாட்டு ; வீட்டினிலும் வீதியிலும் வேறெங்குச் சென்ருலும் உன்னையிங்கு பிரிந்துயிர்க்கும் உள்ளத்தில் ஓங்குகனல் தன்னில் முங்கிக் குளித்தெழுந்த தழல் மணக்கும் துயர்ப்பாட்டு; அன்றுன்ன்ை அணைத்தகரம் அழுதேங்கும் துயர்ப்பாட்டு: குன்றருவிக் கண்ணிழந்த கொள்ளையின்பத் துயர்ப்பாட்டு. உள்ளமெனும் சுடுகாட்டில் உருக்குலைந்த காதல்தனைக் 氰4