பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலேயொன்று மலையொன்று தூரத்திற் கண்டேன்-யானே மண்டி யிட்டுள்ளது போலே தலையினைத் துரக்கி நிமிர்ந்தே-கையைத் தாளின்முன் நீட்டவுங் கண்டேன் நீலத்து மாமணி யதுவே-அதன் நெற்றியிற் பட்டயம் பாரீர் பாலில் விளைந்தவெண் மஞ்சு-அங்கு பட்டய மானது ஆஹா! வானத்தைத் தாங்குவ துண்டோ-அன்றி மழைகொண்ட முகில்விளை யாட்டோ மோனப் பெருநிட்டை தானே-மறை மூலஓங் காரத்தின் வடிவோ நீலத்துக் குள்வளர் நீலம்-என்றன் நெஞ்சை யிழுத்திடும் நீலம் ஆலம் பழுத்தநல் நீலம்-எங்கள் அன்னை பயங்கரி கோலம் கண்டங்கு நான்மெய் மறந்தே-அந்தக் காட்சியில் உள்ளம் நிறைந்தேன் மண்டலச் செண்டுவான் பாய்ந்து-கதிர் மன்னன் எழுந்தருள் நேரம் - 167