பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த போதனை அரசையும் உலகத் தனத்தையும் துறந்து அரசடி யமர்ந்தே அகக்கண் திறந்தவன் திருமுகம் சுடர்தர ஜேதவ னத்தினில் இருள்புதை யாமத் தருந்தவத் திருந்தான் :அசைவிலா மெளனத் தமைதி.ஆண் டிருக்கப் பகம்புற் படரும் பணிபோல் மெல்லெனத் தேவன் ஒருவன் திருமுன் தோன்றி, *யாவரே புவிமிசை விழித்துந் துஞ்சுவார் ? உறங்கிடும் போதும் விழித்துளோர் உண்டோ? அறங்கெடப் புரிகுவர் அவனியில் யாவரே ? மறங்கெடச் செய்பவர் மானிலத் தெவரே ? அறைகுவாய்” என்ன, அக்கணம் பகரும் ; *விழிப்புட னிருந்தும் உறங்குவோர் ஐவர் ; விழிப்புடன் உறங்கிடும் வேளையும் இருப்பார் ; ஐவரே கொடியவர் ; ஐவரே உலகினில் மெய்நிலை பெறவும் மிக உழைத் திடுவார் ’ என்றனன் ஐயன் இளநகை புரிந்தே ; நன்றெனத் தேவனும் விண்ணிடைச் சென்றனன் புத்தனும் மோனப் பெருந்தவம் புகுந்தான்; சத்திய வாக்கினைச் சார்ந்தவர் உணர்ந்தார்ஐவர் உறங்கிட ஆத்மனும் விழிப்பான் : ஐவர்கூத் தாடிடில் அறவினை உறங்கும் ; ஐவரே உலகில் அநீதிகள் புரிவார் ; ஐவரை அடக்கி ஆண்டோர் உயர்வார். 183