பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெற்ற தனம் சப்பையிட்ட பெருநாசி வெள்ளையிட்ட பாழ்நயனம் தந்தையெனக் கேயளித்த தனமிவையே தாரணியில் வெப்பமிட்ட காமத்தில் வீழ்ந்துவிட்ட வாழ்வதனல் விளைந்தவினை என்தாயும் வெம்பிவெம்பிக் காலமெலாம் உப்பைவிட்டு உடலுருகி ஊர்வாயை மூடிமூடி உத்தமியும் போளுளென் ஊனவுடல் மெய்தழுவி அப்பிலிட்டு முத்தமிட்டு ஆநந்தச் சொட்டுதிர்த்தாள் அன்பறிவேன் அமிர்தமதே ஆனலும் குறையுடைத்தாம் நிறையன்பு தானென்ருல் நெடுந்துயர வாழ்வறவே இறுகியெனத் தழுவியன்றே என்மூச்சைப் போக்காளோ ? 193