பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ழியல் சூறை யடிக்கும் பேய்க் காற்று-களி துள்ளச் சிரித்திடும் கூற்று ஆறு புரண்டிடும் வெள்ளம்-வளர் அன்பு புரண்டதெம் முள்ளம் வானகம் பார்த்து நடுங்கும்-கொடும் மாமலைப் பாம்பும் ஒடுங்கும் கானகப் பேரிருள் தன்னில்-உயர் காதலால் வந்தயெம் கண்ணில் பார்வையிற் பட்டதும் இருளே-எட்டிப் பற்றிக் கை தொட்டதும் இருளே ஆர்வக் கனலொளி தன்னல்-சுட்ட ஆற்றைக் குறுகிளுேம் முன்னல் தந்தை இருள்மனக் கோவம்-அனல் தாக்கக் குலைந்தனள் பாவம் சிந்தைத் துணிவில்ை வந்தாள்-புலி சீறும் புயலினை நொந்தாள் ஒடம் வலிப்பவர் இல்லை-பொங்கும் உன்மத்த வெள்ளத்தின் தொல்லை நாடும் புயவலி நன்றே-மலர் நங்கைநீ வந்திடு என்றே 210