பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலா நிலவெனும் பெண்ணே-நானுணை நெஞ்சினில் பதித்தேன் கவிதையாய் நின்ருய் முகையவிழ் மல்லிகை-சொரிந்திடும் முறுவலின் வெண்மையாய் பகையிருள் மயங்கிட-உலகெலாம் பாற்கதிர் பொழிவாய் எண்ணிலாக் கனவுகள்-உளந்தனில் எழுப்பியே நடந்தாய் கண்ணிலே மதுவாம்-உன்னிடம் காதலாய் நின்றேன் பண்ணெனும் மென்மையை-உன்முகப் பட்டினில் உணர்ந்தேன் தண்ணெனும் விஞ்சையைச்-சிரிப்பினில் தந்திட மாந்தினேன் நித்திலக் கரங்களில்-தழுவினய் நெஞ்சம் தழைந்தேன் பித்தனைப் போலநான்-பிதற்றுவேன் பேசொளு எழிலாய். . పిప్