பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரன் சுவையில்ா இன்பம் சுவையெனக் கொள்ளேல்: "தத்தளித் தோடம் தளர்ந்ததே, ஐயகோ! மெத்தவும் பயந்தேன் வேறினிச் செய்வதென்: :ஊன்றுகோல் என்றன உறுதியாய்ப்பற்றுவாய்.” 'ஈன்றதாய் போலவே என்னையும் காத்து - அன்புடன் ஒடம் செலுத்திடும் ஐயனே, உன்னுடை வாழ்க்கை உரைப்பாய் எனக்கே; உற்ருர் உறவினர் ஊருடன் பேரும் நற்ருய் தந்தையர் நலம்பிற வெல்லாம் அறிந்திடப் பெரிதும் ஆர்வமாய் உள்ளேன்.” "மறந்தனை என்னை நீ ; மற்றுமோர் ஊரும் பேரும் எனக்கிலை; பித்தராய்ப் பலரும் ஊருடன் பேரும் ஒன்றல இரண்டல ஆயிரம் கூறுவர்; அவையெலாம் பொய்யே,’’ "தாயும் தந்தையும் சாற்றிட ി:്ലേ?? என்னைப் பெற்ருேர் யாருமே இல்லை; என்றுமே யானும் பிறந்ததும் இல்லை.” 'பித்தமோ விக்டப் பேச்சிதோ அறியேன் கைத்தலம் பிடித்த காதலி யாரோ? "பித்தனே யானும் ; பெண்மணி நீயென் உத்தமக் காதலி உணர்ந்திலை இன்னுமோ?” 'கரத்தினை மெல்லவே தீண்டிய கணத்தில் வருத்திய இருள்திரை மாயமாய் விலகிட ஒடமும் யாறும் ஒன்றையும் காணேன்: 301