பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதுவா வெகுதுரம்


மண்டியவுன் வலிப்பெருக்கால்

   வகுத்தவின்ப நாடெதுவோ?” "அதுவா வெகுதுரம் 
   ஆராய்ச்சிக் கெட்டவில்லை.”


"வண்ணம் பலகுழைத்து

   மனக்கனலைத் தீட்டியதில் பண்ணும் பரதமுமாய்ப்
   பரந்தஎழில் தான்கூட்டும் எண்ணரிய ஓவியனே
   எவ்வுலகம் நாடுகின்றாய்?” "அதுவா வெகுதூரம்
  இதுவரையும் காணேன்நான்."


"இன்பக் கனவையெல்லாம்

   எழுத்தால் வடித்தெடுத்துத் துன்பமெனும் சொல்லொழியத்
  துணிந்துபெருங் கவிபுனையும் 

அன்பனே நீநோக்கும்

  அவ்வுலகம் எதுசொல்வாய்?”

"அதுவா வெகுதுரம்

   ஆர்வமுடன் தேடுகின்றேன்.”


"வானவர்கள் தாமறியா

   வாழ்வதனை எட்டிவிட 

ஊனுடலை மிகவாட்டி

    ஓங்குதவம் தான்புரிந்து


           44