இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறைந்த ஜோதி
காற்றுத் திசையினிலே
காதோடே போகாமல்
வாழ்க்கையிலே நல்லொளியாய்
வழிகாட்ட முன்னடவீர் ;
ஏழ்மையிலும் தாழ்மையிலும்
இன்பமிகுங் காலத்தும்
எக்காலும் கைக்கொள்வீர்
எங்கும் பரப்பிடுவீர்.
அறிவால் வளர்ந்தோங்கி
அணுவைப் படையாக்கும்
திறமாம் செருக்கினிலே
அன்புள்ளம் சிறுத்திட்ட
அவனிதான் அழியாமல்
அவன் வாக்கே காத்திடுமால்;
புவிமீதிற் சமத்துவ நற்
புதுவாழ்வை நாட்டிடுமால்;
எண்ணத்திற் காந்தி மகான்
என்றும் மறையாமல் திண்ணமாய்க் காத்திடவே சேர்ந்திடுவீர் சோதரரே.
அன்பென்று பேசியங்கே அன்ருெருவர் வந்திருந்தார்அன்பு பேசிவந்தவர் இயேசுகிறிஸ்து. நூற்றிருபத்தைக்தெனினும் - காங்தியடிகள் தாம் நூற் நிருபத்தைந்து ஆண்டுகள் வாழப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்வதாகவும் அவர் கூறியதுண்டு.
50