பொங்கல்
பொங்கல் புதுநாள் வந்தது.பார்-எங்கும்
பொங்குக அன்பறம் இன்பமுமே !
இங்கெமை வருத்திய துன்பமெல்லாம்-இன்றே
ஏகிட இறைவனைத் தொழுதிடுவோம்
பொங்கொளி ஞாயிறும் எழுந்தனனே-அவன்
பொலிவினில் மாய்ந்திடும் பணிபோல
தங்கிய குறைகளும் சிறுமைகளும்-தலை
சாய்ந்தினி ஓடிடும் நிச்சயமே
செந்நெலும் கரும்பும் விளைந்தனவே-நல்ல
தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக-தேசம்
எழிலுடன் கூடியே நலமுறுக
பிரிவுகள் பேசியே பூசலிட்ட-பழம்
பேதமை தனைத்தள்ளி அனைவோரும்
ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம்-நம்முள்
ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்
தமிழன் திருநாள் பொங்கலென்ருல்-அதில்
தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே-யாரும்
புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?
55