இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சத்தியம்
மார்பகத்தே குருதி சிந்த
மறைந்திட்டார் என்று சொன்னால்
சத்தியம் செத்ததோ
தர்மம் ஒளி மங்கிற்றோ?
இத்தரணி யென்னாளும்
ஈடேறி உய்யாதோ ?
சத்தியந்தான் வெல்லாதோ
தர்மநெறி ஓங்காதோ ?
என்று மனம் சோர்ந்தேன்
இருள்கூடி நெஞ்சுடைந்தேன்.
அத்தப் பொழுதினிலே
அகக் கண்ணின் முன்பாக
உன்னதமாம் லட்சியத்திற்
குயிரீந்த மேலோரின்
மன்னுபுகழ் வடிவெல்லாம்
வந்தனவே ஒளிமயமாய் :
எல்லோர்க்கும் நடுநிலையாய்
இயேசுமுனி அன்புருவம்
கல்லும் கரைந்துருகும்.
கருணை ஒளி கண்டிட்டேன் :
அன்பென்று பேசி வந்த
அவர் நெஞ்சில் ஆணியிட்டுத்
துன்மதியோர் கொன்றிட்டார்
தூயமகான் மறைந்தாரோ
ஏசுமுனி மாய்ந்தாரோ
இல்லை யில்லை நாமறிவோம்
65