பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 செல்லடா !


செல்லடா ! முன்னெழுந்து செல்லடா !

          சரணம்

முன்வைத்த காலைப் பின்வைக்க லாகுமோ ? உன்னத லட்சியம் உச்சியிலுள்ளது-செல்லடா !

உச்சியென் றாலும் உள்ளம் மலைக்காதே கச்சை வரிந்தே கட்டிப் புறப்பட்டுச்-செல்லடா!

ஜோதியைப் போலே தூரத்தில் காணுது சீதக் கதிர்மணித் தெய்வக் கிரீடம்-செல்லடா !

தாய்சிறப் பெய்தவே சாவை எதிர்த்துநீ பாய்புலி நாணிட மார்பை நிமிர்த்தியே-செல்லடா!


             84