இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைவு அலைகள்
கெஞ்சிலே ஆயிரம் ஆயிரம் நினைப்புக்கள்,எண்ணங்கள் ஆசைகள் எழுந்து சதா ஆலை மோதுகின்றன.ஆனால் இருபதாம் வயதிலே, இளமையிலே அவற்றின போக்கே வேறு; ஐம்பதாம் வயதிலே, முதுமை எய்துகின்ற காலத்திலே ஆவற்றின் போக்கே,வேறு எல்லோருக்கும் அல்ல - பெரும்பா லோருக்கு.
இருபதில் :
மண்ணிலே உயர் தேவநல்
லின்பத்தை
வளரச் செய்துநான் யார்க்கும்
வழங்குவேன்!
விண்ணிலே அந்தத் தாரகைக்
கூட்டத்தில் வீடமைத்துப் புதுஉல காக்குவேன்;
கண்ணிலே ஒளி காட்டும்
அழகியர் காதல் என்றிடில் சாதலுக் கஞ்சிடேன்;
தண்ணென் மாமதி தன்னைப்
பிழிந்துமே சாறெடுத்துமின் தங்கமும் பண்ணுவேன்.
மாந்த யாவரும் ஒர்நிலை
தன்னிலே வாழும் இன்பச் சமூகத்தை நாட்டுவேன்;
சாந்தி அன்பறம் எங்கும்
தழைத்திடத் தளர்விலா துழைத் தேஜயங் கூட்டுவேன்;
கூந்தல் நீண்ட இளங்கொடி
மேனியர் கூறிடிற்கடலேழும் சுருட்டுவேன்;
காந்த மின்பொறி ஞான
மனத்தையும் கண்டுழைப்புச் சலிப்பை வெருட்டுவேன்.
88