இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைவு அலைகள்
ஆண்டு நூறுக்கு மேலிங்கு யாவரும்
அமரவாழ்வு பெற வழி காணுவேன்;
யாண்டும் பூவும் பொலிவும் கலைகளும்
ஈண்டிஓங்கும் பலபணி பூணுவேன்;
மூண்டகாதல் மடந்தை முறுவலில்
மோதும் உள்ளக் கருத்தும் முடிப்பன்யான்;
நீண்ட நல்லின்ப வீடிது தானென
நீள் நிலத்தையும் மாற்றி அமைப்பனே.
ஐம்பதில் :
மண்ணிலே யெனக் குள்ளதெண் காணியே,
மற்றோர் காணி பிடித்திடச் சூழுவேன் ;
வெண்ணெய் போலொளிர் சுண்ணநற் சாந்தினால்
வீடுகட்டி நான் சொந்தமாய் வாழுவேன்;
பெண்ணிலே யொரு பேதையைக் கொள்வதால்
பிறவிநோய்தனைப்பெற்றதைத் தேர்ந்துளேன்
பண்ணும் ஊழியர் தம்மைப் பிழிந்துமே
பங்கயத் திருச் சேர்க்கவே நாடுவேன்.
மாந்தர் யாவரும் ஒர்நிலை யென்னுமோர்
வாசகம் பொய்க் கதையெனக் கண்டுளேன்;
காந்தி கொண்டபொற் காசுகள் ஈட்டலே
கருதுவேன் இனிக் கனவுகள் கண்டிடேன்;
கூந்தலுக் கொரு வாசநெய் வேண்டுவார்
கூறைச்சேலை நகையெனக் கூவுவார்
சாந்தியோ டிங்கு வாழவிடுவரோ?
சற்றுமில்லை நான் முற்று மறிந்திட்டேன்.
89