பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கடிதம் 'கறுப் பெ'ன்றுனைப் பழித்தார்

  கவலைநான்கொள்ளவில்லை; 

‘விருப்புற்று நீ யுரைக்கும்

  வேல் விழிக ளெங்கெ'ன்றார். மதுவில் மயங்கிடுங் கார்
   வண்டு நிகர் நின் கண்கள் வதியும் ஒளி யறிய
   மதியில்லார் என் நண்பர்; 'பார்த்திட்ட மங்கை யெலாம்
   பஞ்சத் தழ கென்பாய், 

சீர்த்தி மிகும் அஜந்தா வின்

   சித்திரம் போல் வேணு மென் 
   பாய் 

எங்கடா நீ புகழ்ந்த

   எழிலெல்லாம்? உன்மனதை இங்கே பறி கொடுக்க
   என்ன தான் கண்டு விட்டாய் என்றே பல பல வாய்
   ஏளனங்கள் பேசுகின்றார் ; குன்ற உயிர்க் காதல்
   கொழுந்திடச் செய்யுனை 
   யறியார் 

நகைப்பைக் கண் டொரு சிறிதும்

  நான் சோர வில்லை ; இன்று முகங் கோணி  வார்த்தை

சொன்னாய்

   முடிவில்லை என் துயர்க்கே.


             98