பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

காங்கிரஸ் கமிட்டி நடந்து முடிந்தது. தேர்தல் அண்டி வரும் நேரம் இது. இதற்குகந்த வழியில்தான், சடங்குகளும் பேச்சுக்களும் அமைந்திருந்தன. பல பலஹீனங்களும் பல தவறுகளும் இருந்த போதிலும், ஒருநாடு என்ற முறையில், இந்தியா உலகில் உன்னத ஸ்தானம் வகிக்கிறது. பிற நாட்டார் அதைக் கெளரவிக்கிறார்கள். அதற்கு மரியாதை செய்கிறார்கள். அதன் குரலுக்கு உலகில் இன்று செல்வாக்கு இருக்கிறது. இந்யதிாவின் உள்நாட்டு, சர்வதேசக் கொள்கையில் ஒரு நேர்மை இருப்பதே அனைத்திற்கும் காரணம்.” என்று மதுரை வரவேற்பில் நேருஜி குறிப்பிட்டார்.

நாம் பெருமைப்பட வேண்டிய செயல்தான். ஆனால் தமிழ் இனத்தவர் மன அமைதி கொள்ளுவதற்கான வகையில் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க இம்மாநாடு பூரணமாக முயற்சி செய்ததாகச் சொல்லமுடியாது!