பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

103

உங்களைப் பார்க்கணும்னு ஒரே ஆசையா இருக்கு பாட்டி!” என்றான் அருணகிரி.

அதன் பிறகு சில நொடிகள் போன் மவுனமாக இருக்கவே, அருணகிரி, “பாட்டி...பாட்டி...” என்று கூப்பிட்டான்.

“அருணகிரி எனக்கு இப்போ உடம்பு சரியில்லை! குணமானதும் நான் உன் கூடவே வந்து இருக்கப் போறேன். சந்தோஷம்தானே? அம்மாவையும், அப்பாவையும் நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லு!” என்று கூறிவிட்டு பரமகுருவைக் கூப்பிடச் சொன்னாள் பாட்டி.

பரமகுரு போனை கையில் வாங்கிக் கொண்டு என்ன “பெரியம்மா?” என்றார்.

“ஒன்றுமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அருணகிரி, வள்ளியம்மை, விஜயன் எல்லாருடைய போட்டோவிலும் ஒரு காப்பி எடுத்து எனக்கு அனுப்பி வைக்கிறாயா? உன் மாமாகிட்டே எல்லா விபரமும் சொல்லி இருக்கிறேன். வள்ளிக்கும் அருணகிரிக்கும் நீதான் துணையாய் இருக்கணும். என்னாலே அதிகம் பேச முடியவில்லை. போனை மாமாவிடம் கொடுக்கறேன்,” என்று கூறினாள்

பொன்னம்பலத்திடம் பரமகுரு பேசும்போது, “மாமா! நீங்க வருகிறவரை உங்க போன் நம்பரை