பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தென்னை மரத் தீவினிலே...

யும் கொடுங்கள். குறித்துக் கொள்கிறேன்," என்றார்.

பொன்னம்பலம் நம்பரைக் கொடுத்துவிட்டு, “வேறு விசேஷம் ஒன்றுமில்லையே? வைத்து விடவா?” என்றார்.

“வைத்து விடுங்கள் மாமா! குட்நைட்!” என்றார் பரமகுரு.

போனை கீழே வைத்த பரமகுரு, அப்படியே பிரமித்துப் போய் அருகிலிருக்கும் சோபாவில் உட்கார்ந்து விட்டார். அவருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது

ஒரு டெலிபோன் மணி ஒலிக்க ஆரம்பித்து அது முடிகிற நேரத்திற்குள், “அருணகிரியை ஐம்பது லட்சத்துக்கு அதிபதி என்று உணர்த்திய அதிசயத்தை எண்ணியபோது, ‘ஓ மை காட்...யூ ஆர் கிரேட்’ என்பதைத் தவிர அவரால் வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை!

செல்வந்தர் வீட்டுப் பெண்ணாய் பிறந்தும் வாழ்நாள் முழுவதும் வறுமையோடு போராடும் வள்ளியம்மைக்கு, இத்தனை காலம் கடந்தாவது கந்தன் கருணை புரிந்தானே என்று பரமகுரு எல்லையற்ற மகிம்ச்சியில் திளைத்தார்.