பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15




தாயில்லாப் பிள்ளை

வந்தவனுக்கு கிட்டத்தட்ட விஜயனின் வயது இருக்கும். தோற்றத்தில் அவன் மிகவும் சோர்ந்து போய் வந்திருப்பது தெரிந்தது.

"என்ன விஷயம்? யாரைப் பார்க்கவேண்டும்?" என்று கேட்டார் பரமகுரு.

"கனக விஜயன் உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லிவிட்டு வரும்படி அவசரமாக அனுப்பினார்.

நான் அவரது நண்பன். அவருக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன், பெயர் குமரேசன்!" என்று தன்னைப்பற்றிய குறிப்பைத் தெளிவாக விளக்கினான்.

"உள்ளே வாருங்கள்.” என்று பரமகுரு அவனை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தார்.