பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16
இதயம் வெடித்தது

விஜயனின் மனைவி வள்ளியம்மைக்கு நேர்ந்த கதியை கேள்விப்பட்டு, அவனது நண்பர்கள் பலரும் அன்றிரவே அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டனர். யாருடைய ஆறுதலான வார்த்தைகளுக்கும் அடங்காமல் விஜயன் வள்ளியம்மையின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய மனம் குமரேசனுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

குமரேசன் வந்து விட்டதாக விஜயனிடம் ஒரு நண்பன் கூறினான்.

அவன் உள்ளே நுழைந்ததுமே, "அண்ணே! நம்ம அருணகிரி உங்க பரமகுரு வீட்டிலேதான் இருக்கிறான்,” என்று கூறி பரமகுரு சொன்ன சொத்து விபரத்தையும் கூறினான். தனியாக விஜயனை அழைத்து, இது வள்ளியம்மையினுடைய