பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தென்னைமரத் தீவினிலே...

இவளிடம் வள்ளியம்மையின் துயரக்கதையை எப்படிக் கூறுவது என்று விஜயன் தயங்கிக் கொண்டு இருந்தான். அவள் மீண்டும் வள்ளியைப் பற்றிக் கேட்கவே வேறு வழியின்றி அனைத்தையும் கூறி முடித்தான்.

வள்ளியம்மையின் பிரிவைக் கேட்டு நீண்ட நேரம் அழுதாள் லிஸியா. பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அவர்கள் இருவருக்கும் உண்பதற்கு சில பலகாரங்களைக் கொண்டுவந்து வைத்தாள். இதற்குள் தூளியில் இருந்த குழந்தை அழுதது. அதை எடுத்து பால் கொடுத்து விட்டு திரும்பவும் தூளியிலிட்டு ஆட்டினாள் குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

ஆட்டிக் கொண்டே “லிசியா, நான் இங்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. குழந்தைக்கு ஏதும் வாங்காமல் வந்து விட்டேன். வருகிற வழியில பக்கத்துத் தெருவிலே ராணுவத்தினர் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பைத்தேடித்தான் உன்னை தேடிக் கொண்டு சட்டென்று இங்கு வந்து விட்டேன்?” என்றான் விஜயன் .

“பரவாயில்லை அண்ணா! இரவு தங்கிப் போகிறீர்களா? உங்கள் சவுகரியம் எப்படி?” என்று கேட்டாள் லிஸியா.