பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தென்னைமரத் தீவினிலே...

அதையும் நம்பாத அவர்கள் தங்களது பூட்ஸ் காலால் நாற்காலிகளையும், மேஜைகளையும் உதைத்தபடி அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிடடு ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டனர்.

அவர்கள் போனதும் வேகமாக சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு வந்தாள் லிஸியா. ஒரு கண்டத்திலிருந்து தப்பினோம். இனி அருணகிரியை அழைத்து வரலாம் என்று அவள் உள்ளே திரும்பினாள்.

சிறிது நேரத்தில் மூங்கில்கள் வெடித்துச் சிதறுவது போன்ற ஓசையும், புகைநாற்றமும் எழுந்தது. அப்படியே ‘வீல்’ என்று தன்னையும் மீறி அலறி விட்டாள் லிஸியா, அவளது வீட்டுக்கூரைபாதிக்கு மேல் பக்கத்து வீட்டோடு சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

லிஸியாவின் அலறலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அருணகிரி வீடு பற்றி எரிவதைப் பார்த்து பயந்து நடுங்கினாள்.

லிலியா தன் குழந்தையை மார்போடு அனைத்தபடி சுவர் ஓரமாக ஒட்டி நின்று கொண்டிருந்தாள்.

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்த லிசியாவிற்கு