பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

139

மறைக்கிற காரியமா? பேப்பரிலேயே, அழித்து நிர்மூலமாக்கப்பட்ட கம்பெனிகளின் விபரம் என்று பட்டியல் போட்டு பிரசுரித்திருக்கிறான். சிக்கிரமாகவே சொல்லி விடுவதுதான் நல்லது. உங்க மாமா இதையெல்லாம் கேட்டு ஒன்றும் கவலைப்பட மாட்டார்!”

சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு மாமாவிடமிருந்து டிரங்கால் வந்தது. பரமகுரு அதை எடுத்தார்.

“பரமு! குணரத்னா எல்லா விஷயத்தையும் எனக்கு சொன்னார். பேப்பர் படித்திருப்பீர்கள். சரி! இனிமேல் உன் புரோகிராம் என்ன? எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. யார் செய்த புண்ணியமோ ஒரு எஸ்டேட் வாங்கினேன் அறுபது லட்சமாவது இங்கே தங்கிச்சு. அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

“சரி! நீ உன் கூடவே, கல்யாணி, தங்கமணி இருவரையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய்விடு. நான் இங்கிருந்து நேராக அங்கே வருகிறேன். அங்கே போன பிறகு என்ன செய்ய வேண்டுமென்று சேர்ந்து யோசிக்கலாம். கொஞ்சம் கல்யாணியைக் கூப்பிடு,” என்றார் மாமா.

பரமகுரு கல்யாணியைக் கூப்பிட்டு கையில் போனை கொடுத்தார்