பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தென்னைமரத் தீவினிலே...

மாமாவைப் போலவே எவ்வித சலனமும் இல்லாமல், கல்யாணியும் மாமாவிடம் பேசிவிட்டு, “சரி நான் இவர்களுடன் சென்னைப் புறப்படுகிறேன். அங்கே சீக்கிரமா வந்து சேருங்கள். வீட்டை என்ன செய்ய? ஒரு தடவை போய் வேலைக்காரர்களிடம் நேரில் பார்த்து சொல்லி விட்டு வரவேண்டாமா?

“சென்னையிலிருந்து அதையெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் சென்னை போனதும். மாப்பிள்ளைக்கும், பெண்ணிற்கும் லெட்டர் எழுது. தங்கமணியை, அவள் அம்மா, அப்பா. அழைத்துக் கொண்டு போகட்டும். நான் இந்தியா வந்து உன்னை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வரும் வரையிலும் நீ சென்னையில் பரமகுருவின் வீட்டிலேயே தங்கியிரு. முதலில் ஊருக்குப் போக எத்தனை டிக்கட் வேண்டுமோ அதை குணரத்னா மூலம் வாங்க ஏற்பாடு பண்ணிக் கொள்,” என்று போனை கீழே வைத்தார்.

அவர்களை ஏற்றி வந்த கார் விமான நிலையத்தை வந்தடைந்ததும், எல்லாரும் இறங்கினார்கள்.

கையில் குழந்தையுடன் காரிலிருந்து இறங்கிய அருணகிரி, அந்த விமான நிலையத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.