பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தென்னைமரத் தீவினிலே...

“டிபன் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு வீடு முழுவதையும் சுற்றி காண்பிக்கிறேன். டிபன் சாப்பிடலாம் வாங்க, பாட்டி கூப்பிடறாங்க,” என்று பொன்னம்பலத்தின் எட்டு வயது பேத்தி தங்கமணி கூறினாள்.

அருணகிரிக்கு அவளுடைய அன்பான பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

பரமகுருவும், பொன்னம்பலமும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்துகொண்டு மனம், திறந்து உரக்க பேசிக் கொண்டிருந்தனர்

“இத்தனை வருவும் கழித்து எல்லாரையும் கூட்டிக் கொண்டு வந்து ஒரு வாரத்திலேயே போகணும்னா எப்படிடா பரமு? கம்பெனி வேலை இருந்தா நீ புறப்படு. அம்மாவும் குழந்தைகளும் ஒரு மாசம் இங்கே இருந்துவிட்டு போகலாம்,” என்று ஒரு முடிவு எடுத்து விட்டார் போல் கூறினார் பொன்னம்பலம்.

“அதற்கில்லை மாமா! பாபுவிற்கும், ராதாவிற்கும் கால் பரீட்சை வருகிறது. இப்ப கூட யாரையும் கூட்டிக் கொண்டு வருகிறதா இல்லை. நான் மாத்திரம்தான் வருவதாக இருந்தேன். அம்மாதான் புறப்படுகிற சமயத்தில், “கதிர்காமம் வந்து, கதிர்காமனை தரிசனம் செய்ய வேண்டும்,” என்று கூறினாள். சரியென்று எல்லாருமாக கிளம்பினோம்.”