பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

51

அடுத்து அவர் அனைவரையும் உயிர்க்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார். அது அன்றாட பொழுது போக்கு இடங்களில் ஒன்றாகவும் இருந்தது. இதற்கான நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு எல்லோருக்குமாக டிக்கட் வாங்கி வந்தார் கனகசபை.

“வெளி நாட்டு பயணிக்களுக்காக மட்டுமின்றி, உள்நாட்டு பயணிகளுக்காகவும்; உள்ளூர் மக்களுக்காகவும் உயிர்க் காட்சி சாலைகளில் மிருகங்களை நன்கு பழக்கி வைத்து அன்றாடம் சர்க்கஸ் காட்சி போல் வியக்கத்தக்க பல நிகழ்ச்சிகளைக் காட்டி வருகிறார்கள்,” என்றார் கனகசபை.

நன்கு பழக்கப்பட்ட யானை ஒன்று, மனிதனை அலக்காக மேலே தூக்கி எறிந்து விட்டு மனிதன் கீழே விழும் போது தாங்கிப் பிடித்தது. பின்னர் அவனை மிதிப்பது போலவும், அவனது தலை முழுவதையும் விழுங்கி கழுத்தைக் கடிப்பது போலவும் பாவனை செய்தபோது ராதா பயந்து நடுங்கி கத்தியே விட்டாள்.

பின்னர் அந்த மனிதனை யானை எவ்வித ஆபத்துமின்றி கீழே இறக்கி அவனை தூக்கி தன் முதுகின் மீது வைத்துக் கொண்டு கூட்டத்தினரை பார்த்து வட்டமாக ஊர்வலம் வந்தது, இத்தனை அமர்க்களத்துக்கும் அந்த மனிதன் சிரித்துக் கொண்டே இருந்தான்!