பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



66

தென்னைமரத் தீவினிலே...

சென்றது. அதில் ராணுவ வீரர்கள் போல் தோற்ற மளித்த சிலர் இருந்தனர்.

வள்ளியம்மை, தனக்கு முன்னால் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஆளுடன் துணை சேர்ந்து விடவேண்டுமென எண்ணி வேகமாக நடந்த போது, சற்றுமுன் அவளைக் கடந்து சென்ற ஜீப்பிலிருந்தவர்கள் வள்ளியம்மையை நோக்கி சரமாரியாக சுட்டனர். இலங்கை மண்ணிற்கு ரத்த தானம் செய்து கொண்டே அவள் உயிர் பிரிந்தது.