பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தென்பாண்டிச் சிங்கம் 319 இன்பத்தின் பூரிப்பு அங்கமெலாம் பொங்கிட ஒரு மூலையில் போய் நின்று உடைகளை ஒழுங்காகக் கட்டிக் கொண்டு, கட்டிலருகே வந்து நின்று வைரமுத்தனின் பாதங்களைத் தனது பட்டு விரல்களால் மெல்லத் தொட்டு அந்த விரல்களைக் கண்களில் கொண்டாள். ஒத்திக் தாலியையும் அவ்வாறே கண்களில் ஒத்திக் கொண்ட பிறகு, அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள். அயர்ந்து தூங்குகிறவன் விழித்துக்கொள்ளக் கூடாதேயென்ற பயத்துடன் மெதுவாக அவன் தலைப்பக்கம் போய், அவனது அகன்ற நெற்றியில் மலரால் தொடுவது போல இதழால் ஓர் முத்தம் இசைத்தாள். அத்துடன் அங்கிருந்து வெளியிற் செல்ல் நகர்ந்தவளைத் திடீரென வைரமுத்தனின் கைகள் வாரிக் கொண்டன. முகத்தை மூடிக் கொண்டே "உம், விடுங்கள். அண்ணி தேடுவார்கள்!" என்று அவனிடமிருந்து விடுபடுவதுபோல் நடித்தாளே தவிர "ஏன் பொழுது விடிந்தது?" என்று மனதுக்குள் சபித்தாள். அவன் எழுந்து உட்கார்ந்து அவளைத் தழுவிக் கொண்டே படுக்கையில் இருவருமாகச் சாய்ந்தனர். "நாழிகையாகிறது. என்ன இது விளையாட்டு?" என்று கூறிக் கொண்டே கல்யாணி படுக்கையிலிருந்து எழுந்திடவில்லை. "இரவு முழுதும்... தெவிட்டவில்லையா?" என்று ணுங்கிக்கொண்டே அவனது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்! "அப்படியென்றால் உனக்குத் தெவிட்டி விட்டதா?" என்ற வைரமுத்தன் அவள் உச்சந்தலையில் முத்தமாரி பொழிந்தான்.