பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 81 படங்களை வாளுக்குவேலியும் வல்லத்தரையனும் கவனித்தனர். "பாவம்! இந்தக் கட்டபொம்மனுக்கு வந்த சுதி பெரிய மருது -சின்ன மருது இருவருக்கும் வரக் கூடாது. என்பதுதான் என் கவலை! மருது பாண்டியர்களிடம் என்ன கேட்கிறோம்! எங்களுக்கு அடங்கியும் கப்பம் செலுத்தியும் எங்கள் ஆதிக்கத்திற்கு இடையூறு இன்றியும் உங்கள் பரிபாலனத்தை நடத்துங்கள் என்றுதானே கூறுகிறோம். இதைவிடச் சிறந்த சமரச ஏற்பாடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?...உம்! எப்படியோ அவர்கள் வீழ்ச்சியை அவர்களாகவே தேடி அலைகிறார்கள் அவர்களை எப்படியும் சிறைபிடிப்பது என்ற நோக்கத்துடன்தான் நான் புறப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், அது சம்பந்தமாகத்தான் உங்கள் இருவரின் உதவியை நாடுகிறேன். அதற்காகவே உங்களையும் வருமாறு அழைப்பு விடுத்தேன். "" வாளுக்குவேலியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கர்னல் துரை! மருது சகோதரர்களைப் பிடிப்பதற்கு எங்களிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?" வீரம் மிக்க வாளுக்குவேலியின் குரல் தழுதழுத்தது! எத்தனையோ ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு அன்னியன் இந்தத் தமிழ் மண்ணில் அமர்ந்து காண்டு எவ்வளவு ஏகடியமாகப் பேசுகிறான் என்பதை எண்ணிடும்போது அவன் வீர நெஞ்சம் படபடக்கத்தாள் செய்தது. கர்னல் துரை மேலும், தொடர்ந்தாள். "மருது பாண்டியர்களைப் பிடிப்பதற்கு எனக்கு மூளையில் ஒரு அருமையான திட்டம் உருவாகியிருக் கிறது. பாகனேரி. பட்டமங்கலம் இரண்டு அம்பலக்