தேன்மொழிவரலாறு. 129 வடமொழித் தொடர்களை இடையிடையே காணலாம். தமிழிலே இவர் வடமொழிகளே யெடுத்துப் பிரயோகித்த அளவு முன்னுள்ள நூலாசிரியர் ஒருவரும் பிரயோகிக்க வில்லை. சங்கத்தார் காலத்துக்குப்பின் இருந்த புலவ ரெல்லாம் வடமொழிச் சொற்களை மிகச் சுருக்க மாகவே எடுத்து வழங்கினர். இவரும் இவருக்குப்பின் வந்த புலவர்களும் வடமொழிப் பதங்களை அளவின்றி வழங்கி யிருக்கின்றார்கள். இவருடைய நூலில் சொல்லணி பொ ருளணி சந்தம் என்னும் மூன்றாம் மலிந்து கிடத்தலைப் பரக்கக் காணலாம். "காவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் - பாலை! லர் மானங்காத் தான் பங்கயச் செங்கையென் ன - மேவலரெமரென்னாமல் வெங்களந்தன்னில் நின்ற - காவலன் கன்னன் கையும் பொழிந்தது கன கமாரி. இவ்வாறே தமது தாதாவாகிய ஆட்கொண்டானுடைய பெருமைகளை எடுத்து இடை யிடையே புகழ்ந்து பாராட்டித் தமது பாரதம் உலகத்தில் "நின்று நிலவும் வரையும் அவன் புகழும் அழியாது நின்று நிலவுமாறு செய்தனர். வில்லிபுத்தூராழ்வார் பாரதத் தில் பத்துப்பருவங்களும் ஐம்பது சருக்கங்களும் நா லா யிரத்து முந்நூற்றைம்பக்தொரு செய்யுட்களும் உள்ளன. இவர்காலம் சாலிவாகனசகம் ஆயிரத்திரு நூறு என்பர். சித்தாந்த சாத்திரங்கள். உந்தி களிறோ டுயர் போதஞ் சித்தியார் பிந்திருபா வுண்மைப் பிரகாசம் - வந்தவருட் பண் புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சு விடு வுண்மைநெறி சங்கற்ப முற்று. என்னும் வெண்பா ாைல் சித்தாந்த சாத்திரங்கள் இவையெ ன்பது இத்தனை என்பதுமுண க.திருவருட்பயன், சங்கற்ப 17
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu/page145-936px-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu.jpg)