133 தென்மொழி வரலாறு. பரிமேலழகர் , இவர் காஞ்சீபுரத்திலே வைஷ்ணவப் பிராமண குலத் திலே அவதரித்து வடமொழி தென் மொழி யிரண்டிலும் வல்லுநராய் விளங்கித் திருவள்ளுவர் குறளு க்குரையியற் றிய ஆசிரியர். இவரைப் பாண்டி.நாட்டிற்பிறந்தவரென் பாருமுளர். அது பொருந்தாமை, "வள்ளல் சிலைப்பெ ருமாணச் சர்சாத்தர் வழுதிமுதற்-றள் ளுவனார்க்குந் " தலையான பேரையும் தன்னுரையை-விள் ளுவனார்க்குந் திருக்காஞ்சிவாழ் பரிமேலழகன் - வள் ளுவனார்க்கு வழி காட்டினான் றொண்டைமண்டலமே என்னுந்தொண்டை மண்டலச தகத் தானுணர் க. வள்ளுவர் குறளுக்கு உரை செய்தவர்கள் பதின் மர். அ வருள் ளே சிறந்தவர்கள் நச் சினார்க்கினியரும் இவருமேயாவார்கள். அவ்விருவருள் ளும் இவரே தம்முரையாற் சிறந் தார். பதின் மர் உரை யையு மொருங்குகற்று ஒப்புநோக்கிய ஆன்றோர் ஒருவர் - கூ றிய:---- பாலெல்லா நல்லா வின் பாலாமோ பாரிலுள்- நூலெல்லாம் வள்ளுவர்செய் நூ லாமோ- நூலிற்-பரித்த வுரையெல்லாம் பரிமேலழகன் - றெரித்தவுரையாமோ தெளி; என்பதனால் அவ்வுண்மை பெறப்படும். நச்சினார்க் கினியர் இவர் காலத்தவரேயா யினும் அவர் வயசால் முதிர்ந்தவர். இவர் வைஷ்ணவரென்பது "அரிமேலன் புறா உமன்பமையந்தணன்" என்னும் ஆன்றோருரையாற் றுணியப்படும் இவர் வைஷ்ணவ ரேயா யினும் சைவாகம் வுணர்ச்சியு முடைய வரென்பது வள்ளுவருரையிலிடை யிடையெடுத்துரைக்கு மாற்றால் விளங்குகின்றது. வள்ளு வருக்குரை செய்த பதின் மருள் முற்பட்டவராகிய தரு மர் ஆருக தர். அவரை ஆருக தர் கள் தருமசேனர் என்பர். அவருரைத்தவுரையிலே பெரும்பாலும் ஆருகதமதக் கொள் கைகளே பிரசங்கிக்கப்பட்டன. இவ்வாறே மற் றையோரும் தத் தஞ்சார்புபற் றியு ரைத்தார்கள். அவருள்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/149
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu/page149-936px-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu.jpg)