138 தென்மொழிவரலாறு றது. இவர் காலமும் பரிமேலழகர் காலமும் ஒன்று. கந்தபுராணம் பாடிய கச்சியப்பசிவாசாரியர் காலத்துக் கும் கம்பர் காலத்துக்கும் முன்னுள்ளவரென்பது அவர் நூல்களினு தாரணங் கொள்ளாமையா னும் வேறு சிலவே துக்களா னும் நன்றாகத் துணியப்படும். ஆதலின் இவர் ஆயிரத்திருநூறு வருஷங்களுக்கு முன்னுள்ள வர். இவர் கலித்தொகைக்குச் செய்த வுரை மிக வும் அற்புத மான து. பேராசிரியர். | 4 இவர் திருச்சிற்றம்பலக் கோவை யாருக்குரை செய் தவர். நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய வுரை யில் பேராசிரியருடைய கொள்கைகளை எடுத்துக்காட்டிப் போவதால் அவர் இவருக்கு முற்பட்டவராதல் வேண்டும். பேராசிரியருடைய உரை மிக்க சுருக்கமும் விளக்கமு முடையது. திருச்சிற்றம்பலக்கோவையாருரை நச்சினார்க் கினியர் உரையென்று சிறிது காலத்துக்கு முன் கொள்ளப் பட்டது. இப்போது ஆராய்ச்சியில் பேராசிரியர் உரை யென்று வெளிப்பட்டது. தொல்காப்பியத் துக்கும் குறுந் தொகைக்கும் இவரும் உரை செய்ததாகத் தெரிகின்றது . இவர் மதுரை யாசிரியரெனவும் படுவர். இவர் இளம் பூரணருக்கு வித்தியாகும் நச்சினார்க்கினியர்க்கு இளம் பூரணர் வித்தியாகுரு நச்சினார்க்கினியர் தமது குரு வாகிய இளம்பூரணரை ஆசிரியர் என்றும், தமது குரு வுக்குக் குருவாகிய மதுரையாசிரியரைப் பேராசிரியரென் றும் வழங்குவாராயினர். அவ்வழக்குப் பற்றி இவர்க்குப் பேராசிரியர் என்னும் பெயர் நிலைப்பதாயிற்று அடியார்க்கு நல்லார். இவர் சிலப்பதிகாரவுரையாசிரியர். சிலப்பதிகாரத் துக்கு அரும்பதவுரையொன்று இவருக்கு முற்காலத்திற்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu/page154-936px-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu.jpg)