தென்மொழி வரலாறு. மொழியில் மகேசுவர சூத்திரம் என்றும் தமிழில் இசை நுணுக்கம் என்றும் கூறுவார்கள். இவ்வுண்மை தனிநடங்குயிற்றும் சம்பு நம்பெருமான் தமருகப் பறைக்கண் அ இ உ ணு வென் றமர் தருசூத்திரமாதியீரேழ்பெற வடமொழிக்கியல்பாணிநிமாமுனிக்குத் திடமுற நன்கு தெரித்தமைபோல விந்தமும் வேலையும் வீறுபோய்க்குன்றக் கந்தமென்கமலக்கரத்தினை விதிர்த்த வருந்தவக்கொள்கையகத்தியமுநிக்குத் திருந்திசை நுணுக்கச் செந்தமிழியலினைச் செப்பினன்” என வரும் தாண்டவராய சுவாமிகள் வாக்காற் பெறப்படும். மகேசுவர சூத்திரத்தை ஆதாரமாகக்கொண்டு இந்தி ரன் ஓரிலக்கணஞ்செய்தான். அஃது ஐந்திரமெனப்படும் இசை நுணுக்கத்தைக்கொண்டு குமாரக்கடவுள் தமிழில் குமரமென்னும் இலக்கணத்தைச் செய்து அகஸ்தியரு க்கு உபதேசித்தார். அதனை ஆதாரமாகக்கொண்டு அக ஸ்தியர் அகத்தியமெனப் பெயரிய தமிழ் இலக்கணத் தைச் செய்தார். தலைச்சங்கத்தின் வரலாறு மேல் வரும் ஆசிரியப்பாக் கூற்றாலுணரப்படும். வேங்கடங்குமரி தீம்புனற்பௌவத் திந்நான்கெல்லையிலிருந்தமிழ்பயின்ற செந்நாப்புலவர்செய் தியீண்டுரைப்பி னாடகக்குடுமிமாடக்கூடலின் முன்னர்ச்சங்கக்கன் மாப்பலகையிற் றிரிபுரமெரித்த விரிசடைக்கடவுண் மன் றன்மராத்தார்க்குன்றெறியிளஞ்சேய் திண்டிறற்புலமைக்குண்டி.கைக்குறுமுனி
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu/page38-936px-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.djvu.jpg)