இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104
அவனைக் "கரடி"
என்று விழைந்து அழைத்தனர். திக்குகள் மொதம் நான்கு ;
அவர்கள் திசை அறியாமல்
திக்கு முக்கு ஆடினர்;
சீதையை எங்கே சென்று தேடுவது ?
தெற்கே சென்றவன் ஒரு
வேளை திசை மாற்றிச் சென்றிருந்தால் என்ன செய்வது? தென்திசை செல்வது தேவை
என்று அனைவரும் செப்பினர் ; அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
அங்கதன், நீலன், அனுமன் , சாம்பவான்; துணைவர் சிலர்.
இலங்கைக்கு ஏகும்வழியைச் சுக்கீரிவன் ஒரு வரைபடம்
தந்து விளக்கிக் கூறினான்.
விந்திய மலை; அதனைக்
கடந்தால் நருமதை ஆறு ;
ஏமகூடமலை; அதனையும்
கடந்தால் பெண்ணையாறு;
விதர்ப்ப நாட்டைக்
கடந்தால் பாண்டுமலை ;
கோதாவரி ; சுவணம் ;
இந்த ஆறுகளைக் கடந்தால்
கொங்கணம் ; குலிங்க நாடு ;
அதன்பின் அருந்ததிமலை ;
அதனைக் கடந்தால்