பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


அவனைக் "கரடி"
 என்று விழைந்து அழைத்தனர். திக்குகள் மொதம் நான்கு ;
 அவர்கள் திசை அறியாமல்
திக்கு முக்கு ஆடினர்;
சீதையை எங்கே சென்று தேடுவது ?

தெற்கே சென்றவன் ஒரு
 வேளை திசை மாற்றிச் சென்றிருந்தால் என்ன செய்வது? தென்திசை செல்வது தேவை
 என்று அனைவரும் செப்பினர் ; அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
 அங்கதன், நீலன், அனுமன் , சாம்பவான்; துணைவர் சிலர்.

இலங்கைக்கு ஏகும்வழியைச் சுக்கீரிவன் ஒரு வரைபடம்
 தந்து விளக்கிக் கூறினான்.

விந்திய மலை; அதனைக்
 கடந்தால் நருமதை ஆறு ;
 ஏமகூடமலை; அதனையும்
 கடந்தால் பெண்ணையாறு;

விதர்ப்ப நாட்டைக்
 கடந்தால் பாண்டுமலை ;
 கோதாவரி ; சுவணம் ;
 இந்த ஆறுகளைக் கடந்தால்
 கொங்கணம் ; குலிங்க நாடு ;

அதன்பின் அருந்ததிமலை ;
 அதனைக் கடந்தால்