இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
பெண்ணுக்குத் தாலி ;
ஆணுக்கு மோதிரம் ; முன்னதைக் கழற்ற மாட்டார்கள் ; பின்னதைப் பிரிக்க முடியும் ; இதுதான் வேறுபாடு.
மண ஒப்பந்தத்தைக் காட்டும் தீப்பந்தம் அது ; அதைவிட விளக்கம் அங்குத் தேவைப் படவில்லை.
அவள் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது ; குளிர் நீர் தங்கியது ;
அதை அவள் குளிப்பாட்டித் தூய்மைப் படுத்தினாள் ; "தீயவர் நாட்டுக்கு வந்தது” என்று கூறி.
அதனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் போர்த்திக் கொண்டு வந்து குவிந்தன.
"தாரம் தான் அல்லள் என்றாலும் அவன் தன் வீரம் காட்டுதல் வேண்டும்" என்று விரும்பினாள்.
"தாடகையைக் கொன்றான் ; பரசுராமனை வென்றான் :