இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
123
காக்க மாட்டாய்.
நடுக் கடலில் இந்தக்
கொடியவர்கள்
இடுக்கண் தந்தால்
எப்படித்தடுக்க முடியும் ?
சிந்தித்துப் பார்"
என்று அவனை
வாழ்த்தி அனுப்பினாள்.
ஊருக்குத் திரும்பு முன்
அரிசி களைந்து
உலையில் போட
விரும்பினான் ; அது
கொதிக்க வேண்டும்
என்று மனம் கொந்தளித்தான்.
மாளிகைகள் கட்டிடங்கள்
இவற்றில் தாவிப்பாய்ந்தான்;
கோபுரக் கலசங்களைச்
சாயவைத்தான் ; எதிர்த்தவரை
மாய வைத்தான்.
அரண்மனை வாயிலின் முன்
'கட் அவுட் ஒன்று
இராவணன் தன் வடிவில்
பத்துத் தலைகள்
எழுதித் தன் பராக்கிரமத்தை
விரிவு படுத்திக் காட்ட
வைத்திருந்தான்.
ஆற்றல் மிக்கவன்
என்பதைக் காட்ட
இந்த விசித்திர