பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


காக்க மாட்டாய்.
 நடுக் கடலில் இந்தக்
 கொடியவர்கள்
 இடுக்கண் தந்தால்
 எப்படித்தடுக்க முடியும் ?
 சிந்தித்துப் பார்"
 என்று அவனை
 வாழ்த்தி அனுப்பினாள்.

ஊருக்குத் திரும்பு முன்
 அரிசி களைந்து
 உலையில் போட
 விரும்பினான் ; அது
 கொதிக்க வேண்டும்
 என்று மனம் கொந்தளித்தான்.

மாளிகைகள் கட்டிடங்கள்
 இவற்றில் தாவிப்பாய்ந்தான்;
 கோபுரக் கலசங்களைச்
 சாயவைத்தான் ; எதிர்த்தவரை
 மாய வைத்தான்.

அரண்மனை வாயிலின் முன்
 'கட் அவுட் ஒன்று
 இராவணன் தன் வடிவில்
 பத்துத் தலைகள்
 எழுதித் தன் பராக்கிரமத்தை
 விரிவு படுத்திக் காட்ட
 வைத்திருந்தான்.

ஆற்றல் மிக்கவன்
 என்பதைக் காட்ட
 இந்த விசித்திர