இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
145
"இலை என்ன செடியே
கொண்டு வருவேன்;
செடி என்ன?
மலையையே கொணர்வேன்" என்று அனுமன் புறப்பட்டான்.
மலையோடு வந்தான் என்று சொல்கிறார்கள்; வேரோடு பெயர்த்து வந்தான் அதுதான் உண்மை;
இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான்; மறுபடியும் போர் தொடங்கியது.
யாரோ சந்நியாசிகள் இந்திரசித்துக்குச் சொல்லி இருந்தார்கள் "நிகும்பலை கோயிலுக்குச் சென்றுவழிபட்டால் நிச்சயம் வெற்றி" என்று அறிவிக்கப்பட்டது;
படைத்தலைவன் மகோதரனைக் களத்தில் நிறுத்தி விட்டு யாகம் செய்ய நிகும்பலை
தெ-10