40
பதவிகளில் இருந்து இறக்கப் படுகிறார்கள் ;
அவர்களுக்காக யாரும் இரக்கப்படுவது இல்லை.
அப்பொழுது ஐம்பது ஆண்டுகளுக்கு
ஒருமுறை மாமாங்கம் , அந்த
நாளை நாட்டு மக்கள் வரவேற்றனர்.
தேர் ஓட்டி சுமந்திரன்
காரை நிறுத்தி விட்டுக்
கதவைத் திறந்து வைத்துக்
கொண்டு இராமனை அழைத்தான் ;
தசரதன் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
மகனை அணைத்துத் தன்
மார்பு ஆரப் பிணைத்தான் ;
தழுவினான் ; அவன் தோற்றம்
கண்டு தந்தை ஏற்றம் அடைந்தான்.
சட்டை தைக்கும் தொழிலாளி
அளவு எடுத்துப் பின் கழுத்துக்குப்
பட்டை தைக்கிறான்.
இவன் அவன் ஆற்றல் அளந்து
அறிபவன் போல அவனைத்
தழுவித் தேர்ந்து ஆய்ந்தான்.
'ஆண்டுகள் பல அரசு ஆண்டு
அலுத்துவிட்டேன் ; நிலச்
சுமை தாங்குதல் உன்
கடன்' என்று அறிவிப்புச் செய்தான்.
ஓய்வு பெற்று விட்டால் என்ன
செய்வது? குட்டைகளைக் குழப்பி