பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

        பதவிகளில் இருந்து இறக்கப் படுகிறார்கள் ;
        அவர்களுக்காக யாரும் இரக்கப்படுவது இல்லை.
        
        அப்பொழுது ஐம்பது ஆண்டுகளுக்கு
        ஒருமுறை மாமாங்கம் , அந்த
        நாளை நாட்டு மக்கள் வரவேற்றனர்.
        
        தேர் ஓட்டி சுமந்திரன்
        காரை நிறுத்தி விட்டுக்
        கதவைத் திறந்து வைத்துக்
        கொண்டு இராமனை அழைத்தான் ;
        தசரதன் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.
        
        மகனை அணைத்துத் தன்
        மார்பு ஆரப் பிணைத்தான் ;
        தழுவினான் ; அவன் தோற்றம்
        கண்டு தந்தை ஏற்றம் அடைந்தான்.
        
        சட்டை தைக்கும் தொழிலாளி
        அளவு எடுத்துப் பின் கழுத்துக்குப்
        பட்டை தைக்கிறான்.
        
        இவன் அவன் ஆற்றல் அளந்து
        அறிபவன் போல அவனைத்
        தழுவித் தேர்ந்து ஆய்ந்தான்.
        
        'ஆண்டுகள் பல அரசு ஆண்டு
        அலுத்துவிட்டேன் ; நிலச்
        சுமை தாங்குதல் உன்
        கடன்' என்று அறிவிப்புச் செய்தான்.
        
        ஓய்வு பெற்று விட்டால் என்ன
        செய்வது? குட்டைகளைக் குழப்பி