48
அவள் உறுதி கொண்டவள் :
அவன் இறுதிக்கு அஞ்சவில்லை ;
அவள் அன்று இரவு
தூக்க மருந்து இல்லாமலேயே
அமைதியாக உறங்கினாள்.
அவன் அமைதி இழந்து
அலைமோதிக் கிடந்தான்.
பொழுது விடிந்தது ; அவன்
அழுது அயர்ந்தான் ;
எழுந்து இவள் சுமந்திரனை
அழைத்து ஆள் அனுப்பினாள்.
அரசு மாளிகையில் இருந்து
'ஜீப் வந்து நின்றது; அவன்
தொப்பி சிவப்பு அணிந்து இருந்தான்.
ஏதோ ஆணை வீடு தேடி வருகிறது;
இராமன் சென்று ஏற்றான் ;
அன்னை கைகேயியின் அழைப்பு.
அவனை அவள் மகனாகக் கொண்டவள் ;
நேச மகன் என்று அன்பு செலுத்தினாள்;
அவள் அவனைத் தூக்கி எறிவாள்
என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
காலம் கருதிச் செய்த மாற்றம் இது ;
அவன் அடைந்தது பெரும் ஏமாற்றம்.
சுருக்கமாக அவனிடம் பேசினாள் ;
'காடு சென்று நீ