பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

           75

சென்ற விவரம் நடந்த கலவரம் கூறும் படி ஆரவாரம் இன்றிக் கேட்டான். "பக்கத்தில் இரண்டு காளையர் இருந்தனர் ; இல்லாவிட்டால் கக்கத்தில் அவளை வைத்து இழுத்து வந்திருப்பேன்" என்று ஆசையைக் கிள்ளிவிட்டாள்.

பிறகு தங்கை என்ன ஆனாள்; அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிளாஸ்டிக் அறுவை நடந்தது ; அவளை அவன் மறந்துவிட்டான். மூட்டி விட்டு எரி எழுப்பிச் சென்றாள்.

மாரீசன்வதை

சீதையை அடைவது எப்படி ? மானிடர் இருவர் அவர்களுக்கு மாஇடர் செய்தால் அவள் உடன் உயிர் விடல் உறுதி;

போர் செய்வது பயன் இல்லை; விளைவு அவள் உடன் கட்டை.

"காவலை விட்டு நீக்கி அவளைத் தனிமைப் படுத்தி ஏவல் கொள்வதுதான் தன் ஆவல் தீர வழி" என்று ஆழ்ந்து சிந்தித்தான்.