பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 37

வந்தவர் என்று அஞ்சினான்; தன்னை வைத்து ஆட்டிப் பிழைக்க அவர்கள் கூத்தாடிகள் அல்ல என்பதை அறிந்தான்.

கையில் வில் இருந்தது; வீரர்கள் இவர்கள் என்பது அறிந்து வைத்தான்; வழி தவறி அங்கு வந்த வாலிபர்கள் ; அவர்களுக்கு வழி காட்டலாம் என்று அவர்கள் விழியில் அவன் பட்டான்,

கையில் அவர்கள் சீட்டு ஒன்று வைத்திருந்தார்கள்; அதில் பின் கோடு உட்பட வட்டம் மாவட்டம் தெரு எல்லாம் எழுதி இருந்தன.

வீட்டு எண் தெரியாமல் வீதி வீதியாக அலைந்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது அவனுக்கு. "சுக்கிரீவனா ? அவர் என் எசமானர் ; வந்த செய்தி யாது?

பார்த்தால் பறி கொடுத்தவர் போல் நீங்கள் நிற்கிறீர்கள்'