கோவிந்தனிடம் முறையீடு கட்டசெடி பக்கவில்ல-விட்டகன்று கனவில்ல;
குட்டியும் பொறக்கவில்லை-கோவிந்தா, என் பட்டியும் நெறையவில்லையே!
சட்டி பானே காணவில்லை;-வெட்டியமண்
போதவில்லை; -
மட்டு மட்டாய்ப் போனதையா-கோவிந்தா:
செட்டுக் கட்டாய் ஆனதையா!
ஆறும் பெருகவில்லை;-ஐயன் தேரும் ஒடவில்லை; நீரும் பெருகிவந்ததே;-கோவிந்தா, ஊரும் தெரியவில்லையே!
ஆல மரத்துக்கிளி-ஐயன் வளர்த்தகிளி, சோலைப் பசுங்கிளியோ?-கோவிந்தா, காலன் வரும் ஒளியோ?
ஒண்னும் அறியவில்லை;-கண்ணும் தெரியவில்லை; பொன்னியும் ஓடிவருகிருள்;-கோவிந்தா, மென்னியும் அடைச் சிருமுதே!
லேக் கடல்அலையில்-ஏலம் எடுத்துவந்தேன்; ஜாலிப்பு வேணுமையா,-கோவிந்தா,
நான் இப்போ அடிமை ஐயா!
ஊனும் இறங்கவில்லை; உள்ளம் படியவில்லை; காணும் இமைநேரத்தில்-கோவிந்தா, உயிரை அடிமைவச் சேனே! -
பண்ணும் பரிகாசம்-புண்ணுச்சு ஒருதோசம்; எண்ண முடியவில்லையேl-கோவிந்தா, கண்ணுலே பார்த்திடுவாயே.