பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுந்தர சண்முகனார் 2 உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் இயங்கும் என்று தத்துவ நூலார் உரைப்பர். ஒருவர் செய்தித்தாள் எடுத்துப் படித்தால் பக்கத்தில் இருப்பவர்க்கும் அந்தப் பசி தோன்றும். ஒருவர் தண்ணீர் குடித்தால் உடன் வருபவரும் ஒரு குவளை குடித்து வைப்பார். அப்பா ஏதாவது ப்டித்துக்கொண்டிருந் தால், குழந்தையும் எதையாவது எடுத்து வைத்துக்கொண்டு படிப்பவன்போல் மழலை சிந்துவான்; அப்பா படம் போட்டால், அவனும் தன்னை இரவிவர்மாவாக ஆக்கிக் கொண்டு, ஒன்று கிடக்க ஒன்றைக் கிறுக்கி, இது நல்லா யிருக்காப்பா? என்று வேறு கேட்டுவைப்பான், ஆமாம், அன்றில் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இளைஞ ருக்கும் அந்த வேட்கை நோய் தொற்றிக் கொண்டது. இளைஞரும் தன் பெட்டியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வெளியில் வைத்தார். புத்தகம் என்றறிந்ததும், அன்றிலின் கண்களும் நோட்டம்விட்டன. இருவருமே புத்தகப் பைத்தியங்கள் போலும்! அந்தப் புத்தகத்தின்மேல், அறவணன் எம்.ஏ., காரைக்குடி என்று எழுதியிருந்தது. அந்தப் பெயரைக் கண்டதும் அவள் உள்ளமும் வேலை செய்யத் தொடங்கியது. அறவணன் என்ற பெயர் புதிதாய் இருக்கிறதே! இவருடைய பெயர்தானா? அப்படியானால், இப்புத்தகம் இவருடையதாக இருக்க வேண்டும். அல்லது, வேறு யாருடைய புத்தகமோ - வேறு யாருடைய பெயரோ? இருக்க முடியாது. பெயரை அடுத்து, காரைக்குடி என ஊர் குறிக்கப்பட்டிருப்பதாலும், இந்த வண்டி தனுசுகோடியி லிருந்து காரைக்குடி வழியாகத்தான் திருச்சிக்கு வந்திருக் கிறது. ஆதலாலும், இவர் காரைக்குடியாராகத்தான் இருக்க