பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 21 பற்றிச் சொற்பொழிவாற்றுதலையோ, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுதலையோ குறியாகக் கொண்டவர்க்கும் அந்நூல் பெருந்துணை புரியும். தமிழ் நூல்களை அயல்நாடுகளில் - அயல்மொழிகளில் பரப்புவது இருக்கட்டும்; நம் நாட்டில் நம் மக்கள் அனைவரும் கற்கும் காலம் எக்காலம்? வெற்று அத்தை - பாட்டி கதைகளையும், படிப்பவரைத் துப்பற்றவ ராக்கும் துப்பறியும் தொடர்கதைகளையும் படித்துக் கொண்டிருந்தால் போதுமா? சிறுகதைகளும் தொடர் கதைகளுங்கூட, “ĝı60j6ĵuJ udĝı'il po (Literary value) உடையனவாய் இருக்க விேண்டுமே. புகைவண்டி போய்க் கொண்டிருக்கிறது. அன்றிலும் அறவணனும் எம்.ஏ. படித்தவர்களாயிருந்தும், இருபதாம் நூற்றாண்டினராயிருந்தும் எந்தவிதத் தொடர்பும் கொள்ள வில்லை. ஒருவரை யொருவர் ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளவும் இல்லை. விருத்தாசலம், விழுப்புரம், செங்கற் பட்டு - சந்திப்புகளில் அறவணன் கீழே இறங்கித் தன் தேவைகளை இடையிடையே முடித்துக் கொண்டார். அன்றிலோ வண்டியில் இருந்தபடியே தேவைகளைச் சரி கட்டிக்கொண்டாள். உடன் பயணம் செய்யும் வடநாட்டினர் இடையிடையே ஏதேனும் ஆங்கிலத்தில் அன்றிலிடம் கேட்பர். இது என்ன ஊர்? இதோ கோபுரம் தெரிகிறதே, என்ன கோவில்? இதோ மலை தெரிகிறதே, என்ன மலை? என்று கேட்பர். அக்கேள்விகட்குரிய பதிலை மட்டும் அவள் சொல்லி வைப்பாள். ஆனால் அறவணன் மட்டும் அவள் வம்புக்குப் போகவேயில்லை. பிற்பகல் 2-52 மணிக்கு வண்டி தாம்பரம் நிலையத்தில் வந்து நின்றது. அங்கே அறவணன் இறங்கிக்கொண்டார். இறங்கும்போது மட்டும் ஒருமுறை அன்றிலைப் பார்த்தார்,